திருநங்கை மாணவிக்கு நிதியுதவி வழங்கிய பொதுநல அமைப்பினர்
பள்ளிபாளையம் திருநங்கை மாணவிக்கு குமாரபாளையம் பொதுநல அமைப்பினர் நிதியுதவி வழங்கினர்.
HIGHLIGHTS
பள்ளிபாளையம் திருநங்கை மாணவிக்கு குமாரபாளையம் பொதுநல அமைப்பினர் நிதியுதவி வழங்கினர்.
திருநங்கைகள் வாழ்வின் முன்னேற கல்வி கற்பது அவசியம். பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரு திருநங்கை தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 378 பேர் தேர்வு எழுதிய நிலையில் 356 பேர் தேர்ச்சி பெற்று 94 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் படித்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரியின் மகள் 20 வயது மகள் திருநங்கை ஸ்ரேயா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் 337மதிப்பெண் பெற்று தமிழகத்தில் ஒரே திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய திருநங்கை மாணவி ஷ்ரேயா, தான் தனது தாய் வளர்பில் வளர்ந்து வருவதாகவும், தொடர்ந்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற பள்ளி தலைமை ஆசிரியர் சக ஆசிரியர்கள் மற்றும் தாயின் அரவணைப்பு காரணமாக 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உயர் கல்வியை தொடர முடிந்ததாக தெரிவித்தார்.
தான் பாலியல் தன்மை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பெற்றோரும் ஆசிரியரும் தொடர்ந்து ஊக்கப்படுத்தியது என்னை மேலும் படிக்கத் தூண்டியது. மேலும் அரசு தனக்கு உதவி செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும் என மாணவி ஸ்ரேயா நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து தனது போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தி வாழ்வின் மேன்மை பெற வேண்டும் என ஸ்ரேயா அறிவுறுத்தினார்.
திருநங்கை மாணவி ஸ்ரேயாவிற்கு குமாரபாளையத்தை சேர்ந்த இனி ஒரு விதி செய்வோம் பொது நல அமைப்பின் அமைப்பாளர் கவிதா, திருநங்கை மாணவி ஸ்ரேயாவிற்கு நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.
--