/* */

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 50 மரக்கன்று நடப்பட்டது

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாமில் 50 மரக்கன்று நடுதல் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில்   50 மரக்கன்று நடப்பட்டது
X

குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாமில் மாநில அமைப்பு செயலர் இராமன் தலைமையில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம் மாநில செயலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

இது பற்றி கோட்ட பொறுப்பாளர் அழகிரி கூறும்போது

பஜ்ரங்தள் முகாம், விஷ்வ இந்து பரிசத் 10 நாட்கள் முகாம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சிகள் வழங்கப்படும். சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. பாரத நாட்டின் பெருமைகள், நம் நாட்டின் கலைகளின் பெருமைகள், முன்னோர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் பேசவுள்ளனர். நேற்று 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், தென் பாரத அமைப்பு செயலர் நாகராஜன், திருக்கோவில் மற்றும் திருமண அமைப்பின் தமிழக கேரளா அமைப்பாளர் சரவண கார்த்திக், மாநில அமைப்பு செயலர் இராமன், மாநில இணை செயலர் கிரண், மாவட்ட விவசாய அணி தலைவர் பன்னீர்செல்வம், பஜ்ரங்தள் மாநில நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர் என்றார்.

Updated On: 17 May 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்