/* */

சரக்கு வாகனங்களால் போக்குவரத்து இடையூறு

குமாரபாளையத்தில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சரக்கு வாகனங்களால்   போக்குவரத்து இடையூறு
X

குமாரபாளையத்தில் சரக்கு வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு

குமாரபாளையத்தில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட நேரிட்டது

குமாரபாளையம் சேலம் சாலை பழைய காவேரி பாலம் முதல் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு வரை சுமார் மூன்று கி.மீ. தொலைவு உள்ளது.இதே போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை, எடப்பாடி சாலை ஆகியனவும் போக்குவரத்து மிகுந்த சாலைகளாகும். இந்த சாலைகளில் இரு புறமும் ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு லாரிகள் மூலம் சரக்குகள் வருகின்றன.

இவைகள் பகல் நேரத்தில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் சரக்கு இறக்குகிறோம் என்ற பெயரில், லாரிகளை நிறுத்தி, இதர வாகனங்கள் போவது குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இது போன்ற வாகனங்கள் மீது அபராதம், ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Updated On: 1 Sep 2023 2:56 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...