Begin typing your search above and press return to search.
தேங்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு: பொது மக்கள் அவதி
குமாரபாளையத்தில் தேங்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் தேங்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பும் பொதுமக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.
குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலை, சேலம்- கோவை மேம்பாலம் கீழ் பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலரும் இதில் விழுந்து காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.