/* */

கார் உரிமையாளருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த போலீசார்..!

கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்து குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

HIGHLIGHTS

கார் உரிமையாளருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த போலீசார்..!
X

பள்ளிபாளையத்தில் காருக்குள் ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்ட மெக்கானிக் வெற்றிவேல்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே போகாத ஊருக்கு, கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி சேலம் நகர டிராபிக் போலீசார் சார்பில் அபராதத் தொகை குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வசிப்பவர் வெற்றிவேல். இவர் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.. இந்நிலையில் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.. அதில் சேலம் சாலையில் காரில் செல்லும் பொழுது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் அதில் வெற்றிவேலின் வீட்டு முகவரி, கார் எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வெற்றிவேல் கடந்த ஒரு வார காலமாகவே வெளியில் எங்கும் செல்லாமல் கார் தனது வீட்டின் வெளியிலேயே நிறுத்தி வைத்துள்ளார்.. இந்த நிலையில் சேலம் நகர போக்குவரத்து காவல் துறையினர் மூலம் இந்த அபராத தொகை குறுஞ்செய்தி எதன் அடிப்படையில் தனக்கு அனுப்பப்பட்டது? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என புரியாமல் வெற்றிவேல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெற்றிவேல் கூறும் பொழுது கடந்த ஒரு வார காலமாகவே என்னுடைய காரை நான் எங்கும் எடுத்துச் செல்லவில்லை... வீட்டிலேயே தான் கார் நிற்கிறது.. அப்படி இருக்கும் பொழுது இந்த அபராத தொகை எதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு புரியவில்லை.. மேலும் பொதுவாக கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை! இன்சூரன்ஸ் இல்லை என பல்வேறு விதங்களில் அபராத விதித்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போடவேண்டிய ஹெல்மெட்டுக்கான அபராத தொகையை, கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்திருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.. செல்லாத ஊருக்கு போகாத பயணத்திற்கு நான் ஏன் ஆயிரம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும்!? போக்குவரத்து போலீசாரின் மெத்தன போக்கால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.. போலீசாரின் அலட்சியப் போக்கால் கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலம் டிராபிக் போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...


Updated On: 1 Jun 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  2. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  3. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  4. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  5. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  7. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  8. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  10. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...