Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் ஞாயிறு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
குமாரபாளையத்தில் ஞாயிறு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
HIGHLIGHTS
தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3வது முறையாக ஞாயிறு முழு நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் ஒலி பெருக்கி மூலம் ஒரு வார காலமாக நகரின் அனைத்து பகுதியிலும் பிரச்சாரம் செய்தனர்.
நகராட்சி அலுவலர்களும் வணிக நிறுவனத்தார் உள்ளிட்ட அனைவரிடமும் ஆதரவு தர வேண்டி நேரில் அறிவுறித்தினர். சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு இருந்தது. புறவழிச்சாலையிலும் 90 சதவீத வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது.