Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
Rainwater stagnates like a pond under the flyover at Kumarapalayam
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலம் கீழ் பகுதியில் நேற்று பெய்த சாதாரண தூரல் மழைக்கே, குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:மழை வந்தால் இங்கு தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.