/* */

ஆயுதபூஜை வியாபாரத்தை பாதிக்குமா மழை? குமாரபாளையம் வியாபாரிகள் கவலை

குமாரபாளையம் பகுதியில் பகல் நேரத்தில் பெய்த மழையால், வியாபாரம் மந்தாகி வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

HIGHLIGHTS

நவராத்திரி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை சாமான் விற்கும் கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

குமாரபாளையம் நகரில் ஆங்காங்கே வாழை மரங்கள் கடைகள், பூக்கடைகள், பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், பொரி கடைகள், என தற்காலிக கடைகள் அதிகம் அமைக்கபட்டுள்ளன. நவ. 4ல் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி துணிக்கடைகள், நகைக்கடைகள், ஆகியவற்றில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். தங்கள் வசதிக்கேற்ப சாலையோர துணிக்கடைகளில் துணிமணிகள் வாங்கும் நபர்களும் வாங்கி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த வியாபாரம் தற்போதுதான் சற்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், குமாரபாளையம் பகுதியில், நேற்று மாலை 03:00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் அனைத்து வியாபாரிகளும் வியாபாரமில்லாமல் தவிப்புக்கு ஆளாகினர். ஒருவேளை மழை இன்றும் தொடருமானால், ஆயுதபூஜை வியாபாரம் பாதிக்கப்படுமோ என்று, வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

Updated On: 13 Oct 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...