/* */

வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம்

குமாரபாளையம் அருகே, காற்றில் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது.

HIGHLIGHTS

வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில்  பொதுப்பணித்துறை மெத்தனம்
X

வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியதில் பெரிய மரம் ஒன்று முறிந்து வாய்க்காலில் விழுந்துள்ளது.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் ஓரமாக இருந்த பெரிய மரம் ஒன்று, முறிந்து வாய்க்காலில் விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடைந்து விழுந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து பல நாட்கள் ஆகியும் இதனை அகற்ற மெத்தனம் காட்டி வருகிறார்கள். இதனால் ஆடு, மாடுகள் ஓட்டி செல்லவும், கால்நடைகளுக்கு தீவனங்கள் டூவீலரில் கொண்டு செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் இடையூறாக இருந்து வருகிறது. பலத்த காற்றினால் இதே பகுதியில் மற்றொரு மரம் ஒரு வீட்டின் மீது சாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 May 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி