Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் விவசாயிகள் போராட்டத்திற்காக சிறை சென்றவர்களுக்கு பாராட்டு
குமாரபாளையத்தில் விவசாயிகள் போராட்டத்திற்காக சிறை சென்றவர்களுக்கு பாராட்டுநலவாரிய அலுவலகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செப். 29ல் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நலவாரிய உறுப்பினர்கள் 77 பேர் பங்கேற்று சிறை சென்றனர்.
இவர்களுக்கு நலவாரிய அலுவலகத்தில் நலவாரிய அலுவலர் செல்வராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சி.பி.ஐ. நிர்வாகி சண்முகம், சித்த வைத்தியர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். இதில் நலவாரிய உறுப்பினர்கள் சித்ரா, சுஜாதா, ஜெயந்தி, பழனியம்மாள்,புஷ்பா, தேன்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.