/* */

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற முகாமில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்றுமுன்தினம் இரு தரப்பினரரிடையே, பள்ளி நேரம் முடிந்து, மாலை 05:00 மணியளவில் கிழக்கு காவேரி நகர் பாறை மீது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து, நேரில் சென்று சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதே பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.ஐ. நந்தகுமார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள் கூறினார்.

எஸ்.ஐ. நந்தகுமார் பேசுகையில், இந்திய தண்டனை சட்டம், வழக்கு பிரிவுகள், யாவருக்கும் பொதுவானது. மாணவர்கள் கல்வி பயிலும் வயதில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சமூக விரோத செயலில் ஈடுபட்டாலோ, குற்றம் செய்பவருக்கு துணையாக இருந்தாலோ தண்டனை இருவருக்கும் உண்டு. எப்.ஐ.ஆர். எனப்படும் வழக்குபதிவு செய்து விட்டால், மாணவர்கள் உயர்கல்வி பயிலவோ, வெளிநாடு செல்லவோ, அரசு வேலை பெறவோ முடியாது. இனியொருமுறை தகராறில் ஈடுபட்டால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ,மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 27 April 2022 2:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?