/* */

தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த காேரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த காேரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி நிர்வாகிகள், குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி நிர்வாகிகள், குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- குமாரபாளையம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் தேவையான தூய்மை பணியாளர்கள் இல்லாததால், நகரின் அனைத்து பகுதியிலும் குப்பைகள் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது. இதனால் பல நோய்கள் ஏற்பட காரணமாகின்றது. இதனால் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்தி உடனுக்குடன் குப்பைகள் அகற்ற வேண்டும். நகரின் கோம்பு பள்ளம் முட்புதர்களால் அடைக்கப்பட்டு, கழிவுநீர் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பொக்லின் இயந்திரங்கள் அதிகப்படுத்தி கோம்பு பள்ளம் அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா பங்கேற்றனர்.

Updated On: 11 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  6. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  9. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...