/* */

பள்ளிபாளையத்தில் காகித ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

பள்ளிபாளையம் அருகே காகித ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் காகித ஆலை தொழிலாளர்கள்   குடும்பத்துடன் போராட்டம்
X

பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி. காகித ஆலை தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி. காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் அதிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை காலாவதியாகி 36 மாதங்களாகியும் 23 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உறவு ஏற்படவில்லை.


இதனால், எஸ்.பி.பி. காகித ஆலை தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினர்களுடன் ஆலை நுழைவு வாயில் முன்பு, இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழையையும் பொருட்படுத்தாது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தலைமையில் கூட்டு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடனே சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 13 Oct 2021 3:30 PM GMT

Related News