/* */

அட்சயம் அறக்கட்டளை நடத்தும் முதுமையின் தனிமை நிகழ்ச்சி

அட்சயம் அறக்கட்டளை நடத்தும் முதுமையின் தனிமை நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அட்சயம் அறக்கட்டளை நடத்தும் முதுமையின் தனிமை நிகழ்ச்சி
X

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்

இளையோர் சங்கம் – அறிக்கை

(தேசிய உணவு தின விழா)


நிகழ்வின் தலைப்பு: “முதுமையின் தனிமை” மற்றும் “யாசகர்களுக்கு உணவு வழங்குதல்”.

நிகழ்விடம்: அட்சயம் அறக்கட்டளை, சோலார், ஈரோடு.

நிகழ்ச்சி நடந்த தேதி: செப்டம்பர் 1, 2023

நிகழ்ச்சி நடந்த நேரம்: காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை, வெள்ளிக்கிழமை

முன்னிலை: அட்சயம் அறக்கட்டளை யாசகர்கள் முன்னிலையில்

சிறப்பு விருந்தினர்: திரு. P. நவீன் குமார், M.E., அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் , சோலார், ஈரோடு.

வரவேற்புரை: அட்சயம் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் திரு. T.ஜெயராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்வின் சிறப்புரை: திரு. P. நவீன் குமார், M.E., அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் , சோலார், ஈரோடு, அவர்கள் “முதுமையின் தனிமை” பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

தொடரும் நிகழ்வு : தொடர் நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகள் மீட்கப்பட்ட யாசகர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்கு பெற்றோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.


நிகழ்வின் முக்கியத்துவம்:

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1- ம் தேதி தேசிய உணவு வங்கி தினம் கொண்டாடப்படுகிறது. செயின்ட் மேரிஸ் உணவு வங்கி, நாடு முழுவதும் உள்ள உணவு வங்கிகளின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவும் அதன் நிறுவனர் ஜான் வான் ஹெங்கல், 1967 ஆம் ஆண்டு செயின்ட் மேரி உணவு வங்கியை நிறுவியதை நினைவு கூறும் வகையில் தேசிய உணவு வங்கி தினத்தை நிறுவியது. இது பசி மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதில் உணவு வங்கிகள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. சமூகங்கள் ஒன்று கூடுவதற்கும், உணவு வழங்குவதற்கும், தன்னார்வ தொண்டு செய்வதற்கும் மற்றும் உள்ளூர் வங்கிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். இந்த நாள் பசியை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய முயற்சிகளை முன்னிலைப்படுத்த உதவுகிறது மற்றும் மக்கள் தங்கள் சமூகங்களில் உணவுப் பாதுகாப்பின்மையை போக்க நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கிறது.

வளர்ச்சி இலக்கு:

தேசிய உணவு வங்கி தினம் பல ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைகிறது. முதன்மையாக “பூஜ்ய பசி”, குறைக்கப்பட்ட சமத்துவமின்மை , பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி இலக்குகளுக்கான கூட்டாண்மைகள், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. இவை அனைத்தும் தேசிய உணவு வங்கி தினத்தின் மையமாகும்.



நிகழ்ச்சிகள்:

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குமாரபாளையம், இளையோர் சங்கம் சார்பில் செப்டம்பர் 1, 2023- ம் தேதி காலை 11:00 மணியளவில் தேசிய உணவு தின விழாவை முன்னிட்டு ஈரோடு, சோலார் அட்சயம் அறக்கட்டளை இல்லத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியானது உணவு வங்கிகளின் முக்கியத்துவத்தையும் சமூகங்களில் உணவுப் பற்றாற்குறை மற்றும் பட்டினியை நிவர்த்தி செய்வதில் அவை திட்டமிடும் முக்கிய பங்கையும் எடுத்துக்காட்டுகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்க்கு முன்னதாக அட்சயம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி தலைவர் L. சரண்யா அவர்கள் அட்சயம் அறக்கட்டளை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் யாசகர்களின் ஒவ்வொரு அறைகளுக்கும் மாணவ, மாணவியரை அழைத்துச் சென்று யாசகர்கள் மீட்கப்பட்ட விதம் மற்றும் அவர்களை புத்துயிர் பெறச் செய்த விதம் அவர்களுக்காக தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கிக் கூறினார். பின்னர் மீட்கப்பட்ட 33 யாசகர்கள் மற்றும் ஈரோடு,சோலார் அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. P. நவீன் குமார் முன்னிலையில் நிகழ்ச்சி தொடங்கியது. அட்சயம் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் திரு T.ஜெயராஜ் அவர்கள் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் திரு அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் , சோலார், ஈரோடு, திரு. P. நவீன் குமார், M.E., அவர்கள் “முதுமையின் தனிமை” பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.



பல்வேறு பகுதிகளிலிருந்து வீடற்ற யாசகர்களை அட்சயம் அறக்கட்டளையின் தொண்டர்களால் மீட்கப்பட்டு அட்சயம் அறக்கட்டளையின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மன ரீதீயான சிகிச்சை, உணவு,உறைவிடம் மற்றும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு மறுவாழ்வு கொடுக்கப்பட்டு வரும் விதம் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் யாசகர்கள் இல்லாத இந்தியாவை ஊக்குவிப்பதும் பசியை போக்குவதும் தான் அட்சயம் அறக்கட்டளையின் நோக்கமாகும் என்றும் கூறினார். மேலும் நாம் அனைவரும் பெரியவர்களை குடும்ப உறுப்பினர்களை மதித்து அவர்களை அரவணைக்க வேண்டும், ஒரு போதும் துரோகம் செய்யக்கூடாது, நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்றும் கூறினார். பூஜ்ய பசி, நல்ல அரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, ஒழுக்கமான வேலை, பொருளாதார வளர்ச்சி, ஏற்றத்தாழ்வின்மை மற்றும் தரமான கல்வி ஆகியவை பற்றியும் எடுத்துக்கூறினார். நிகழ்ச்சியின் இறுதியாக ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


குமாரபாளையம், சார்பாக 2,500 ரூபாய் இல்லத்தில் உள்ளவர்களின் மதிய உணவிற்காக வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு பரிமாறி மகிழ்ந்தனர். இறுதியாக அட்சயம் அறக்கட்டளையின் சமூக சேவகர் திருமதி. D. பிரியதர்ஷினி அவர்கள் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் மற்றும் அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

நன்றியுரை:

“முதுமையின் தனிமை” மற்றும் “யாசகர்களுக்கு உணவு வழங்குதல்”

நிகழ்ச்சியின் இறுதியில் அட்சயம் அறக்கட்டளையின் சமூக சேவகர், திருமதி. D.பிரியதர்ஷினி, அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Updated On: 6 Sep 2023 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...