mnm party request petition to collector மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு
mnm party request petition to collector குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கப்பட்டது.
HIGHLIGHTS
mnm party request petition to collector
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டரிடம்பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
குமாரபாளையம் நகராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,
கத்தேரி பிரிவு புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், கத்தேரி பிரிவு பகுதியிலிருந்து குமாரபாளையத்துக்குள் வரும் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையின் ஓரத்தில் நட வேண்டும், சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் ஸ்டாண்ட் கடைகள் சேதமானதால் அதனை புதுப்பிக்க வேண்டும், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும், காவிரி கரையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் குமாரபாளையம் எல்லை முழுதும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் மின் கம்பங்கள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்த வேண்டும். குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றவும், போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் மற்றும் போக்குவரத்து சீர் படுத்தவும், போக்குவரத்து போலீசார் அதிகப்படுத்த வேண்டும், ஆனங்கூர் பிரிவு சாலையில் மாணவ, மாணவியர் அச்சமில்லாமல் செல்ல நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். குமாரபாளையம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை அதிகப்படுத்தி சுகாதார பணிகள் தொய்வின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனுவினை மாவட்ட செயலர் காமராஜ், நகர மகளிரணி செயலர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, பன்னீர்செல்வம் உள்பட பலர் வழங்கினர்.