Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு
குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
குமாரபாளையம் நாராயனனகரில் வசிப்பவர் தவசி, 55. கூலித்தொழிலாளி. நேற்று இரவு 08:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் இவர் நடந்து சாலையை கடக்க முயற்சித்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.