Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட வழிகாட்டி போர்டு
குமாரபாளையத்தில் வழிகாட்டி போர்டு 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை எம்.எல்.ஏ. அலுவலகம் பகுதியில் வழிகாட்டி போர்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை எம்.எல்.ஏ. அலுவலகம் பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டது. அப்போது பணிக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்த வழிகாட்டி போர்டு அகற்றப்பட்டு, எம்.எல்.ஏ. அலுவலகம் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டது. இது 2 மாதங்களாக அங்கேயே கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினார்கள். 4 சாலைகள் சந்திப்பில் பலருக்கும் பயன்படும் வழிகாட்டி போர்டை உடனே நிறுவ நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.