நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேறி வீணானது

குமாரபாளையத்தில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வீணாக வெளியேறியது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து  நீர் வெளியேறி வீணானது
X

குமாரபாளையத்தில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பீறிட்டு வெளியேறியது.

குமாரபாளையத்தில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பீறிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் சாலை, கோம்பு பள்ளம் பாலம் பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியே பீறிட்டது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்தினர். குறுகிய நேரத்தில் குழாய் உடைப்பை சரி செய்த நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி மற்றும் மாஸ் கிளீனிங் முகாம் நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் பெயரில் அரசு வழிகாட்டுதல் படி விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கியது. ஆணையாளர் சரவணன் தலைமை வகிக்க, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் அரசு கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.

பல முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி, மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர். காவிரி ஆற்றங் கரையோரம் மாஸ் கிளீன் செய்யப்பட்டது. சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 18 Sep 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை