குமாரபாளையம்: இடமாற்றம் செய்யப்பட்ட ரேசன் கடை திறப்பு
குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேசன் கடை திறப்பு விழா நடந்தது.
HIGHLIGHTS
சேலம்-கோவை புறவழிச்சாலையில் கடை எண்: 2, ரேசன் கடை செயல்பட்டு வந்தது. இது மிகவும் தொலைவாக இருந்ததால் பொதுமக்கள் அங்கு சென்று பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த கடையை நாராயண நகர் பகுதிக்குள் இடமாற்றம் செய்ய பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
வார்டு கவுன்சிலர் அம்பிகா முயற்சியின் பலனாக, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் திறப்புவிழா தி.மு.க. நகர செயலர் செல்வம் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் அம்பிகா ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ரேசன் பொருட்களை முன்னாள் சேர்மன் ஜகநாதன், நிர்வாகிகள் ராஜாராம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் விநியோகம் செய்தனர்.
இதில் மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கிளைக்கழக செயலாளர்கள் கழக உறுப்பினர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.