/* */

குமாரபாளையம் நகராட்சி குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் சேர்மன் விஜய் கண்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி  குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் சேர்மன் விஜய்கண்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் குறைதீர் முகாம் கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வேலை பளு உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து சேர்மன் விஜய்கண்ணனிடம் மனு கொடுத்தனர்.

இது குறித்து விஜய்கண்ணன் கூறும்போது தூய்மை பணியாளர்கள் கொடுத்த மனுவினை பரிசீலித்து அரசு விதிமுறைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.-க்கள் செல்வராஜ், சவுந்தரராஜன், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, சியாமளா, நந்தினிதேவி, பாண்டிசெல்வி, விஜயா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 65 பேர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் 40 பேர், பள்ளி கழிவறை பணியாளர்கள் 20 பேர் ஆக, 125 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 May 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்