Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
HIGHLIGHTS
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி மற்றும் காசி விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்து பக்தர்கள் காணிக்கயைாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டது. தக்கார் நவீன்ராஜா, ஆய்வர் வடிவுக்கரசி, செயல் அலுவலர் சின்னசாமி, கோவில் எழுத்தர் ஸ்ரீ சைல வெங்கடேச முருகன், அர்ச்சகர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 995 ரூபாய் இருந்தது. இது முறைப்படி அரசிடம் சேர்க்கப்பட்டது.