Begin typing your search above and press return to search.
கவர்னர் பங்கேற்ற நேதாஜி விழாவில் பங்கேற்ற குமாரபாளையம் ஐ.என்.ஏ. வாரிசு
சென்னையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில் குமாரபாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாரிசு பங்கேற்றார்.
HIGHLIGHTS
சென்னையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில் குமாரபாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாரிசு பங்கேற்றார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட அளவில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் 200க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இதில் குமாரபாளையத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பழனியின் மகன் பன்னீர்செல்வம், சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இவருக்கு தமிழக ஆளுனர் ரவி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கியதுடன், பங்கேற்ற வாரிசுகளுடன் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார்.