/* */

விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தவர் கைது

குமாரபாளையத்தில் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தவர் கைது

HIGHLIGHTS

விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தவர் கைது
X

பைல் படம்

குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற நபர் கைது .

குமாரபாளையம் நகரில் பகுதியில் பல இடங்களில் மது விற்பதாக தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. சந்தியா, எஸ்.ஐ. தங்கவடிவேல் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கத்தேரி பிரிவு பசுமை தாபா அருகில் நேற்று மாலை 02:15 மணியளவில் ஒருவர் மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். விசாரனையில் அவர் வட்டமலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்து இவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டி மீது மொபட்டில் மோதிய முதியவர் கைது

குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் மீனாட்சி, 58. விசைத்தறி கூலி. அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 70. வீட்டில் இருந்து வருகிறார். நேற்று காலை 05:30 மணியளவில் அதே பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாரிமுத்து, தனது டி.வி.எஸ்.. எக்ஸல் வாகனத்தில் இவருக்கு பின்னால் வந்து மோதியதில், மீனாட்சி பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாரிமுத்துவை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 March 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி