/* */

குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி

குமாரபாளையத்தில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி
X

குமாரபாளையம் நான்குவழிச்சாலையில் விபத்தில் சிக்கிய கார்.

நாமக்கல் அருகே கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சூர்யா(22). இவர் மலேசியாவில் பணியாற்றி வந்தார். இவரும், இவரது மாமா விக்னேசும்(26) இன்று திருமண நிகழ்ச்சிக்காக கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சூர்யா ஓட்டினார். குமாரபாளையம் சேலம்&கோவை புறவழிச்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, முன்னே சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்தை கார் சாலையின் எதிர்பக்கத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சூர்யா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சூர்யா இறந்தார். படுகாயமடைந்த விக்னேசுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 8 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!