Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம்
குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை கொடியேற்றி வைத்து உறுதிமொழி ஏற்று கொண்டாடுவது, கோவையில் நடைபெறும் அனைத்து சங்க வேலை நிறுத்த மண்டல மாநாட்டில் திரளாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் பாலுசாமி, சண்முகம், சரவணன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சார்பில் மாணிக்கம், எச்.எம்.எஸ். சார்பில் செல்வராஜ், எல்.பி.எப். சார்பில் அருள் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.