/* */

குமாரபாளையத்தில் நகை, பணம் திருட்டு: சிறுவன் கைது

குமாரபாளையத்தில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நகை, பணம் திருட்டு:  சிறுவன் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் தங்கராஜ், 53. தனியார் மில் தொழிலாளி. இவரது மனைவி ராமயம்மாள் அதே பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார்.

நேற்றுமுன்தினம் மாலை 05:30 மணியளவில் மனைவியின் உறவினர் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால், தங்கராஜ், மனைவி, மகள் ஆகியோர் ஈரோட்டிற்கு பார்க்க சென்று விட்டு, இரவு 09:30 மணியளவில் வும் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதே பகுதியில் கரும்பு வெட்டும் சிறுவன் மாற்றி, மாற்றி பேசியதால், போலீசார் விசாரணையில் திருடியது அவன்தான் என்பது தெரியவந்தது. அவனிடமிருந்து நான்கரை பவுன் தங்க நகை, 48 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்யா, 17, என்ற சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி