Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி
குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி 6வது ஆண்டாக நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது. இது பற்றி வினோத்குமார் கூறியதாவது:
கொங்கு மண்டலத்தில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு குமாரபாளையத்தில் நடைபெற்றது பெருமைக்குரியது. 2022 ஜனவரி 27ம் நாள் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. நிர்வாக பணிகளுக்காக பல தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அரசு வழிகாட்டுதல் படி ஜன. 27 ஏகமனதாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதில் மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன்,அமைச்சர் பெருமக்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். நிர்வாகிகள் ராஜ்குமார், சுகுமார், விடியல் பிரகாஷ், புவனேஷ், இனியா ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.