ஜேகேகே நடராஜா கல்லூரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு
ஜேகேகே நடராஜா கல்லூரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடைபெறுகிறது.
HIGHLIGHTS
ஜே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்
இளையோர் சங்கம் - அறிக்கை
(சர்வதேச பெண் குழந்தைகள் நாள்)
நிகழ்வின் தலைப்பு: "பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு"
நிகழ்விடம்: செந்தூராஜா அரங்கம், ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நிகழ்ச்சி நடக்கும் தேதி: அக்டோபர் 11, 2023.
நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 11.00 மணி, புதன்கிழமை
முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புல முதன்மையர் மற்றும் பொறுப்பு முதல்வர் முன்னிலையில்
சிறப்பு விருந்தினர்: இலஞ்சி அறக்கட்டளை நிறுவனர், ஜானகி சுப்பிரமணி.
வரவேற்புரை: மு. ஜெயஶ்ரீ, முதுகலை இரண்டாமாண்டு ஆங்கில துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 வரவேற்புரை வழங்குவார்.
நிகழ்வின் சிறப்புரை: இலஞ்சி அறக்கட்டளை நிறுவனர், ஜானகி சுப்பிரமணி, " பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு" பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றுவார்.
பங்கு பெறுவோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.
நிகழ்வின் முக்கியத்துவம்:
ஒவ்வோர் ஆண்டும்
அக்டோபர் 11 - ம் தேதி சர்வதேச பெண் குழந்தை நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினமாது ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் உரிமைகளுக்கு ஒரு குரல் தேவை. அவர்களுக்கு வாழ்வில் அடிப்படை மாற்றங்கள் தேவை என்பதையும் பெண் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி மற்றும் பாதுகாப்பு உரிமைகளை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது.
வளர்ச்சி இலக்கு:
"பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு" நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் நெருக்கடிகள், கல்வி உரிமைகள் என்பதை கடத்து
பெண் குழந்தைகள் எவ்வாறு உடல் ரீதியாக பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். மன நலம் , ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி எடுத்துரைக்கப் படுகின்றது.
நன்றியுரை:
" சர்வதேச பெண் குழந்தைகள் நாள்" நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி மௌனிகா, முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி துறை மாணவி நன்றியுரை வழங்குவார்