Begin typing your search above and press return to search.
குமார பாளையத்தில் கோடை வெப்பத்தை தவிர்க்க உதவும் நுங்கு விற்பனை
கடும் கோடை வெப்பத்தை தவிர்க்க குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்றது.
HIGHLIGHTS
கோடை வெப்பத்தின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் குளிர்பானங்களை நாடி செல்கின்றனர். இயற்கை குளிர்பானங்களான இளநீர், நுங்கு, கரும்பு சாறு, தர்பூசணி, உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகம் நாடி வாங்கி பருகி தாகத்தை தணித்து வருகின்றனர். குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பது நுங்கு என்பதால், பெரியவர்களும் அதிகம் நுங்கு வாங்குவதை காண முடிகிறது. இதனால் நுங்கு விற்பனை குமாரபாளையத்தில் அதிகரித்து காணப்படுகிறது.