/* */

பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள்.

பவானியில், கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு உயர்த்திய கூலியை வழங்கக்கோரி, பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்சீட், நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர்கள் சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில செயலர் சின்னசாமி, சங்க செயலர் சித்தையன், சி.பி.ஐ. ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் மாதேஸ்வரன் ஆகியோர், கோரிக்கை குறித்து பேசினர். கைத்தறி நெசவாளர்களின் சூழலை உணர்ந்த தமிழக அரசு, அடிப்படை கூலியில் 10 சதவீதம், அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்வு வழங்குவதாக கைத்தறித்துறை மானிய கோரிக்கையில் அறிவித்தது.பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம், கைத்தறி நெசவாளர் சங்கத்தினர்  கோரிக்கை மனு அளித்தனர்.

இக்கூலி உயர்வு இதுவரையில் கிடைக்காததால் நெசவாளர்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளர்கள். எனவே விரைவாக அரசு இக்கூலி உயர்வை வழங்க வேண்டும்,நெசவாளர்களுக்கான போனஸை தறிக்கூட உரிமையாளர்கள் வழங்க வேண்டும்; நெசவாளர்கள் மாதம் முழுதும் நெய்வதற்கு கூட்டுறவு சங்கங்கள் நூல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்க துணை தலைவர் ராசம்மாள், கைத்தறி சம்மேளன மாநில குழு உறுப்பினர் சுந்தரம், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பூபதி, சங்க பொருளாளர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக, பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On: 23 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  2. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  4. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  6. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  7. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  8. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  10. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!