/* */

கும்பாபிஷேக விழாவில் நகை திருடும் கும்பல்: போலீசார் எச்சரிக்கையால் பெண்கள் உஷார்

குமாரபாளையத்தில் நகை திருடும் 2 பெண்களை கூட்டத்தை விட்டு வெளியேற்றியதாக போலீசார் கூறியதால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.

HIGHLIGHTS

கும்பாபிஷேக விழாவில் நகை திருடும் கும்பல்: போலீசார் எச்சரிக்கையால் பெண்கள் உஷார்
X

கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட கூட்டம்.

குமாரபாளையத்தில் நகை திருடும் 2 பெண்களை கூட்டத்தை விட்டு வெளியேற்றியதாக போலீசார் கூறியதால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 09:00 மானியளவில் நடந்தது. பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவ்வப்போது மைக்கில் நகை திருடர்கள் ஜாக்கிரதை என சொல்லிக்கொண்டே இருந்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் முன்பாக, நகை திருடும் பெண்கள் இருவரை போலீசார் பிடித்து கூட்டத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இன்னும் சில நகை திருடர்கள் கூட்டத்தில் உள்ளனர். பெண்கள் தங்கள் நகைகளை பத்திரமாக பின் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும் என சாதுர்யமாக ஒரு தகவலை மைக்கில் கூறினார்கள்.

அதன் பின் பெண்கள் உஷாராகி, தங்கள் நகைகளுக்கு பின் போட்டுக் கொண்டனர். போலீசாரின் இந்த அறிவிப்பால் நகையை பெண்கள் பத்திரமாக பாதுகாக்க உதவியாக இருந்தது.

Updated On: 8 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்