/* */

ஊரடங்கு தளர்வு: களை கட்டாத மீன் வியாபாரம், வியாபாரிகள் கலக்கம்

முழு தளர்வு அறிவிக்கபட்டு நிலைமை சீரடைய ஒரு சில மாதங்கள் ஆகும் என மீன் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்

HIGHLIGHTS

ஊரடங்கு தளர்வு: களை கட்டாத மீன் வியாபாரம், வியாபாரிகள் கலக்கம்
X

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மீன்,  இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றங்கரையோரம் ஏராளமான மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து வகையான இறைச்சி கடைகளையும் திறக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.

தற்போது தொற்று பரவல் குறைவு காரணமாக இறைச்சி கடைகளை நேர கட்டுப்பாடுடன் திறக்க அனுமதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிபாளையம் பகுதி முழுவதும் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், ஊரடங்கு காரணமாக பொருளாதார சரிவை பொது மக்கள் சந்திப்பு வருவதாலும், மீன் இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மீன் விற்பனை வியாபாரி கூறியபொழுது, தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார பாதிப்பை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் கொரோனா அச்சமும் உள்ளதால் ஆடு,கோழி,மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்கி வாங்கிச் செல்ல மக்கள் அச்சபடுகின்றனர். இதனால் கடைகளில் மீன்கள் விற்பனை மந்தமாக நடக்கிறது. நிலைமை சீரடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது என தெரிவித்தார்

Updated On: 13 Jun 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்