/* */

கொட்டி வைத்த குப்பையால் அரசு பஸ் மோதி பொறியாளர் உயிரிழப்பு

குமாரபாளையத்தில் கொட்டி வைத்த குப்பையால் அரசு பஸ் மோதி பொறியாளர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கொட்டி வைத்த குப்பையால் அரசு பஸ் மோதி பொறியாளர் உயிரிழப்பு
X

பொறியாளரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் குமாரசாமி, 50. தனியார் நிறுவன பொறியாளர். இவர் நேற்று பகல் 11:30 மணியளவில் மஞ்சுபாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு செய்ய தனது டி.வி.எஸ். ஸ்போர்ட்ஸ் வாகனத்தில் குமாரபாளையம் சேலம் சாலை பவர்ஹவுஸ் அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, நாய்கள் குறுக்கே ஓடி வந்ததால் நிலை தடுமாறியதில் கீழே விழுந்தார். இவரது அருகே வந்து கொண்டிருந்த எஸ்.2 எனும் சங்ககிரி செல்லும் அரசு டவுன் பஸ் பின் சக்கரம் இவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பஸ் ஓட்டுநர் சங்ககிரியை சேர்ந்த சந்திரன், 59, என்பவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் பவர் ஹவுஸ் அருகே குப்பைகள் மலை போல் கொட்டி வைக்கபட்டுள்ளது. இங்கு சாப்பிட கிடைக்கும் என கூட்டம் கூட்டமாக நாய்கள் வருகின்றன. இப்படி வந்த நாய்களுக்கு சண்டை ஏற்பட்டு சாலையில் வர, இதனால் நிலைதடுமாறி இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சாலையின் ஒரு புறம் குடியிருக்கும் குப்பாண்டபாளையம் ஊராட்சி குடியிருப்பு வாசிகள், சாலையின் மறுபுறம் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனால் பறவைகளும் மின் கம்பியில் அமர்வதால் மின் இணைப்பு துண்டிப்பு சம்பங்களும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் சாலையில் இருபுறமும் நடைபாதைக்காக போடப்பட்ட பேவர் பிளாக் தரைத் தளம் முழுவதும் ஆட்டோ பைனான்ஸ் உள்ளிட்ட பல தொழில் நிறுவனத்தார் 2 கி.மீ. தூரம் ஆக்கிரமிப்பு செய்ததால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பஸ், லாரி வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலையும் பல விபத்திற்கு காரணமாக அமைகின்றன.

இது குறித்து குப்பை கொட்டாமல் இருக்கவும், சாலை ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!