/* */

காவிரிநீரை மாசுபடுத்திய ஜவுளி பிரிண்டிங் நிறுவனம் : வாகனங்கள் பறிமுதல்

குமாரபாளையம் அருகே, காவிரி ஆற்று நீரை மாசுபடுத்திய ஜவுளி பிரிண்டிங் நிறுவன வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

காவிரிநீரை மாசுபடுத்திய ஜவுளி பிரிண்டிங் நிறுவனம் : வாகனங்கள் பறிமுதல்
X

பிரிண்டிங் செய்த துணிகளை, சமயசங்கிலி காவிரி ஆற்றில் அலசுவதற்காக எடுத்து வந்த டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

குமாரபாளையம் தொகுதியில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவுகள், காவிரி ஆற்றில் கலந்து, தண்ணீர் மாசுபடாமல் இருக்க, நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். விதிமுறைகளை மீறிய சாயப்பட்டறைகளை பொக்லின் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு பிரிண்டிங் ஜவுளி நிறுவனம் தரப்பில், பிரிண்டிங் செய்த துணிகளை, சமயசங்கிலி காவிரியில் அலசி, ஆற்று நீரை மாசு படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் செல்வகுமார் தலைமையில், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அதிகாரி செந்தில் குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். இவர்களை கண்டதும், 3 டெம்போ ஓட்டுனர்கள், மற்றும் பணியாளர்கள் சிலரும், சமயசங்கிலி காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து தப்பி ஓடினார்கள். அங்கிருந்த 3 டெம்போக்கள், அதில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள பிரிண்டிங் துணிகளை அதிகாரிகள் கைப்பற்றி, பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 13 Oct 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு