/* */

சாலையில் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற திமுக நிர்வாகி கைது

சாலையில் தனியாக சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட திருச்செங்கோடு திமுக நகர இளைஞர் அணி இணை அமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சாலையில் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற திமுக நிர்வாகி கைது
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை சாலையில் நேற்றிரவு வேலைக்குச் சென்ற பெண் பணியை முடித்து திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து பாலியல் தொந்தரவு மேற்கொள்ள முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட அப்பகுதியினர் பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட முயன்ற இளைஞரை அடித்து உதைத்து வெப்படை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும், இவர் திருச்செங்கோடு திமுகவின் நகர இளைஞரணி இணை அமைப்பாளராக பதவி வகித்து வருவதாகவும் தெரிய வந்தது.

அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு சாலையில் வந்தபோது அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 March 2021 6:14 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!