Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்
குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஊராட்சி குட்டிக்கிணத்தூர் பெருமாள்கோயில்காடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எலந்தகுட்டை ஊராட்சி பகுதிக்கு சென்று இப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாரின்படி பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.