/* */

குமாரபாளையத்தில் கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை

குமாரபாளையத்தில், கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை
X

குமாரபாளையம் காவேரி நகரில் வசித்து வந்தவர் ரத்தினவேல், 55, கார் ஓட்டுனர். இவரது மனைவி மகேஸ்வரி, 48. நேற்று மாலை மகேஸ்வரி, தனது உறவினர் வீட்டுக்கு போயிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், வீட்டின் அருகில் குடியிருக்கும் சிலர், ரத்தினவேல் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தொங்குவது கண்டு, மகேஸ்வரிக்கு தகவல் தந்துள்ளனர்.

உடனடியாக வீட்டிற்கு வந்து, அக்கம் பக்க உள்ளவர்களின் உதவியுடன், உடலை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரத்தினவேலை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் பிரச்சனையா? குடும்ப தகராறில் மன உளைச்சலா? என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?