/* */

வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை: அகற்றும் பணி தீவிரம்

தேவூர் அருகே, கிளை வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை: அகற்றும் பணி தீவிரம்
X

கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ் நேரில் பார்வையிட்டார். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்குக்கரை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர், தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி, கல்லம்பாளையம், அம்மாபாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம், வெப்படை வரை செல்கிறது.

இதில் பொன்னம்பாளையம் பகுதியில் இருந்து பிரிந்து கிளை வாய்க்கால் பூமணியூர் பாலம், ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர், வட்ராம்பாளையம், சோழக்கவுண்டனூர், சுண்ணாம்புகரட்டூர், பாலிருச்சம்பாளையம் வழியாக கடந்து சென்று, அண்ணமார் கோவில் பகுதியில், காவிரி ஆற்றில் கலக்கிறது.

கடந்த சில நாட்களாக, கிளை வாய்க்காலில் அதிகளவில் ஆகாயத்தாமரை கொடிகள் சூழ்ந்து, வாய்காலில் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் விரைந்து கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தடைபட்டது. இதனையடுத்து, அரசிராமணி குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ் நேரில் பார்வையிட்டு, ஆகாயத்தாமரை கொடிகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, ஆகாயத்தாமரை உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 2 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  5. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  7. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  9. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  10. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!