பாஜக கட்சி நிறுவன நாள் கொண்டாட்டம்: மாநில துணைத்தலைவர் பங்கேற்பு
குமாரபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சி நிறுவன நாள் கொண்டாடப்பட்டது
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில், கட்சியின் நிறுவன நாள் விழா மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
படைவீடு பேரூராட்சி, அல்லிநாயக்கன்பாளையம் கிராமத்தில், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க., விவேகானந்தா கல்லூரி சார்பில், பொது மருத்துவ முகாமினை மாநில துணை தலைவர், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, சிகிச்சை பெற்று பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், மண்டல தலைவர் கதிரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
குமாரபாளையம் நகரில் பள்ளிபாளையம் பிரிவில், நீர் மோர் பந்தலை மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்ப்பூசணி பழங்கள் வழங்கினார். கட்சி நிர்வாகி அருள் என்பவரின் மனைவி சகாயமேரி தீக்காயத்துடன் அரசு தலைமை மருத்துவமனையிவ் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை மாவட்ட பொது செயலர் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒப்புதலின் பேரில், மாநில துணை தலைவர் ராமலிங்கம் வழிகாட்டுதலில், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ்குமார் குமாரபாளையம் பகுதிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிவித்துள்ளார். நகர தலைவராக சுகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கணேஷ்குமார், ஐயப்பன், வெங்கடேஸ்வரா, ப.தனசேகரன், ஜெகதீசன், இந்திரா, எம். தனசேகரன், மாவட்ட மகளிரணி தலைவியாக புவனேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளை மாவட்ட பொதுச் செயலர் சரவணராஜன், முன்னாள் நகர தலைவர் ராஜு உள்பட பலர் வாழ்த்தினர்.