குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

குமாரபாளையம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதல்வர் உத்திரவின்படி, சேலம் மண்டல நகராட்சிகள் இயக்குனர் ராஜன் வழிகாட்டுதலின் பேரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையத்தில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் நடைபெற்றது. இதில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.

இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவு பங்கேற்று இந்த கலை நிகழ்ச்சியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் மூலமும், வசனங்கள் மூலமும் நடித்து காட்டி சேலம் ரேவதி கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, கவுரி தியேட்டர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் திரண்டு நின்று இந்த நிகழ்ச்சியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ சந்தியா, துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன், உள்பட பலர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு, சாராயம் காய்ச்சுபவர்கள், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு, நல்வழிப்படுத்தி, அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில், நாடகக் கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கிராமியப் பாடல்கள் பாடியும், நடனமாடியும், சிறு நாடகம் நடத்தியும், கட்டைக்கால் ஏணிக்கால் பூட்டிக்கொண்டு நடனமாடியும், கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், மதுப்பழக்கத்தினால் சமூக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 30 March 2023 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி
  2. கோவை மாநகர்
    கோவை தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்துவதாக கூறி கொள்ளை
  3. கோவை மாநகர்
    கோவை குனியமுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையம் திறப்பு
  4. கோவை மாநகர்
    கோவை கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி
  5. ஈரோடு
    ஈரோடு: கனரா வங்கி சார்பில் இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி
  6. கோவை மாநகர்
    கோவை ஜி.சி.டி.யில் படித்து 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த...
  7. இந்தியா
    150 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் ஆதாரங்கள்
  8. வேலூர்
    தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
  9. சேலம்
    முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
  10. டாக்டர் சார்
    does multani mitti remove acne முகப்பருவைப்போக்கி ஆரோக்ய சருமத்தைப் ...