/* */

21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது

21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய குமாரபாளையம் ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

21 ஆண்டுகள் சாரணிய படையில் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது
X

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் சாரணிய ஆசிரியை மாலதிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாரணிய படையில் பணியாற்றி வருபவர் மாலதி. இவர் பள்ளியில் மாணவியாக படிக்கும் காலம் முதல், ஆசிரியை பணியில் சேர்ந்தது வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் சாரணிய இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்து உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சாரணியர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குமாரபாளையம் சாரணிய ஆசிரியை மாலதிக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார் உடனிருந்தார்.

இந்த பள்ளியில் உள்ள சாரணிய மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக ஆளுநரிடம் ராஜ்ய புரஸ்கார் விருது பெற்றுள்ளார்கள் என்பதும், இந்த ஆண்டிற்கான நாமக்கல் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருது இந்த பள்ளிக்கு கிடைத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைமை ஆசிரியை சிவகாமி, பி.டி.ஏ. நிர்வாகிகள் ஆசிரியை மாலதியை பாராட்டினர்.

Updated On: 31 Jan 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?