/* */

குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: டிஎஸ்பி., ஆய்வு

குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: டிஎஸ்பி., ஆய்வு
X

குமாரபாளையம் ஏ.டி .எம். இயந்திரத்தை ஆய்வு செய்யும் திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன்.

குமாரபாளையம் - பள்ளிபாளையம் சாலையில் சேலம், கோவை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். அமைந்துள்ளது. இங்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் சிலர், ஏ.டி.எம். இயந்திரத்தில் வெல்டிங் வைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து, திருசெங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.-க்கள் சேகரன், மலர்விழி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்கள், தடயவியல் வல்லுநர்கள் நேரில் வந்து கை ரேகை பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அக்கம் பக்கம் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 23 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!