Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கோகுல்ராஜ், 26. ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவர் நேற்று நள்ளிரவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலின் பேரில், நேரில் சென்ற குமாரபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.