Begin typing your search above and press return to search.
அதிமுக கவுன்சிலர் புகார் உண்மையல்ல: நகராட்சி கமிஷனர் தகவல்
AIADMK News Today -அ.தி.மு.க. கவுன்சிலர் கூறிய புகார் உண்மையல்ல என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
AIADMK News Today - அ.தி.மு.க. கவுன்சிலர் கூறிய புகார் உண்மையல்ல என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:- நான் எனது அறையில் பைல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி, அலுவலக உதவியாளர் சொன்னது கூட கேட்காமல் உள்ளே வந்தார். பைல்கள் பார்த்துவிட்டு பார்க்கிறேன். காத்திருங்கள் என கூறினேன். கவுன்சிலர்கள் வந்தால் உடனே அவர்களை பார்த்து பேச முடியாதா? என்று கேட்டார். இதுதான் நடந்தது. இது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2