/* */

கம்பத்துகாரர் சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை

குமாரபாளையம் கம்பத்துகாரர் சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

கம்பத்துகாரர் சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை
X

குமாரபாளையம் கம்பத்துகாரர் சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் குமாரபாளையம் கம்பத்துகாரர் சிறப்பு பள்ளியில் இருந்து கலந்து கொண்ட சாமுவேல் இறகு பந்து போட்டியில் முதலிடம் மற்றும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடமும், ஸ்வேதா ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடமும், குண்டு எறிதலில் இரண்டாமிடமும், நித்தியலட்சுமி குண்டு எறிதலில் முதலிடமும், சரண்யா ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் குண்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.

இவர்களுக்கு தாளாளர் உமா மகேஸ்வரி, தலைவர் விஜயகுமார், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினர். சிறப்பு பயிற்சியளித்த சிறப்பு ஆசிரியர்கள் லிடியா, கண்மணி, உதவி ஆசிரியர்கள் மஞ்சு, ரேவதி, தசை பயிற்சியாளர் ராஜபாண்டியன் ஆகியோருக்கு நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


.

Updated On: 4 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!