/* */

பவானியில் குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர சென்றவர் நீரில் மூழ்கி சாவு

பவானி ஆற்றில் குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பவானியில் குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர சென்றவர் நீரில் மூழ்கி சாவு
X

பவானி ஆறு.

குமாரபாளையம் அடுத்த பவானி அருகே ஜம்பை துருசாம்பாளையத்தை சேந்தவர் குமாரசாமி மகன் சக்திவேல் (40). எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக பவானி ஆற்றுக்கு அழைத்து சென்றார்.

தற்போது பவானி சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வேகமாக ஓடி வருகிறது. இவர் தளவாய்பேட்டை, வைரமங்கலம் பகுதியில் பவானி ஆற்றில் பாலத்துக்கு கீழே தண்ணீரில் சென்ற வாழை மரத்தை பிடிக்க சென்றபோது, தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதைக்கண்ட குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சக்திவேல் தண்ணீரில் அடித்து செல்லபட்டது தெரியவந்தது. பொதுமக்கள் ஆற்றின் கரையோரப்பகுதியில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று நீரேற்று நிலையம் பகுதியில் சக்திவேலின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்