Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கே.ஒ.என். தியேட்டர், பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதிகளில் மது விற்ற நபர்கள் பவானி வேலு,45, குமாரபாளையம் சுந்தரம், 46, விஜய்குமார், 30, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 44 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.