/* */

பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Suicide Today - பள்ளிபாளையத்தில் தேர்ச்சி பெறாததால் பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
X

பைல் படம்

Suicide Today - பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன்(வயது 17.) ஓட்டமெத்தை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவு வெளியான நிலையில் இவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த இவர் அலமேடு பகுதியில் உள்ள ரயில்வே டிராக்கில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார், சம்பவ இடம் வந்து பிரேதத்தை கைப்பற்றினர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...