/* */

சட்ட விரோதமாக மது விற்பனை - 2 பேர் கைது

சட்ட விரோதமாக மது விற்பனை - 2 பேர் கைது
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து இருவரிடமும் இருந்து 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் மது,லாட்டரி,கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட எஸ்பி., சக்திகணேஷ் உத்தரவின் பேரில், போலீசார் சோதனை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டவிரோதமாக நடைபெறும் செயல்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் குமாரபாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து காலை முதலே மது விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

புகாரின் பேரில் போலீசார் வட்டமலை பகுதியில் சோதனை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை வைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று ராஜம் திரையரங்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நாகநாதன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 11 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்