/* */

மாநில அளவிலான கபடி போட்டி-நாமக்கல் மாவட்ட அணி முதலிடம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள் பிரிவு கபடி போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி முதல் பரிசை வென்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நாமக்கல், ஈரோடு, கோவை, சேலம், கரூர், சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 45 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வண்ணத்தமிழ் அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் அணி இரண்டாம் பரிசும், வேலூர் மாவட்டம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் மூன்றாம் பரிசும், தஞ்சை மாவட்டம் நான்காம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு விழாக்குழுவினர் ரொக்க பணமும் சுழற்கோப்பையும் வழங்கினர்.இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் வீரர்கள் ஒருவருக்கொருவர் திறமையாக விளையாடி புள்ளிகளை பெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Updated On: 9 March 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  6. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  7. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...